இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை
இலங்கை அதிகாரிகளும் உலகளாவிய முதலீட்டாளர்களும், இலங்கையின் 12 பில்லியன் டொலர் பெறுமதியான திருப்பி செலுத்தாத கடன் பத்திரங்களை மறுசீரமைக்கும் நோக்கில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்த எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொஷிங்டனில் ஏப்ரல் 15ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த காலக் கூட்டங்கள் தொடங்கவுள்ளது.
அதனையடுத்து, வழிகாட்டுதல் குழு என அழைக்கப்படும் பத்திரதாரர்களின் குழு, இந்த விவாதங்களைத் தொடர திட்டமிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
ஜ.எம்.எப் நிதியானது தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த இந்த கடன் மறுசீரமைப்பு மிகவும் முக்கியமானது.
அரசாங்கம் ஏற்கனவே சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் ஆகிய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
