கொதலாவல பல்கலைக்கழக சட்டமூலம் பற்றிய விவாதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலம் பற்றிய நாடாளுமன்ற விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெறாது என அறிவித்துள்ளது.
கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று அலரி மாளிகையில் ஆளும் கட்சிக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சட்ட மூலத்தை கொண்டு வர வேண்டுமென சில தரப்பினர் கூறியுள்ளதுடன், மற்றுமொரு தரப்பினர் கொண்டுவரக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தேச சட்ட மூலத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.