நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை அச்சுறுத்தல்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு (Shehan Semasinghe) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) மாலை 4 மணி மற்றும் மாலை 4.09 மணியளவில் இரண்டு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக அலுவலக ஊழியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எதிர்வரும் தேர்தலுக்கு முன்வர அனுமதிக்கப் போவதில்லை எனவும், தனது அச்சுறுத்தலை புறக்கணித்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் தொலைபேசியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.

கோட்டை பொலிஸார் விசாரணை
மேலும்“தேர்தலின் போது நாங்கள் தான் உங்களுக்கு உதவி செய்தோம், கொழும்பில் இருக்கச் சொன்னோம், இனி இங்கு வரவேண்டாம் என்று சொன்னோம், அப்படிச் செய்தால் உயிரைக் கொடுத்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri