மகன், மருமகன், பேரனை தேடிய தாய் பரிதாப மரணம் (Photos)
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.
வவுனியா - கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த தங்கராசா செல்வராணி (75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது மகன்- தங்கராசா தயாபரன் (41) , மருமகன்- தம்பு தியாகராசா (56), பேரன்- தியாகராசா மனோகரன் (31) ஆகிய மூவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா - செட்டிகுளத்தில் விறகு வெட்ட சென்ற போது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கண்டுபிடித்து தரக்கோரி போராடியிருந்தார்.
இந்நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.








அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
