லண்டனில் இருந்து இலங்கை வந்த பெண் உயிரிழப்பு - பொலிஸார் வெளியிட்ட தகவல்
வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண் குடும்ப பிரச்சினை காரணமாக மனவிரக்தியில் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அழகிய பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென வவுனியா பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
32 வயதான சிந்துஜா என்ற உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் லண்டனில் வசிக்கின்றனர். மேலும் இறந்த பெண் சில காலமாக அவர்களைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டனில் இருந்து நாடு திரும்பியவர் வவுனியாவுக்குச் சென்று உறவினர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென காணாமல் போயிருந்த நிலையில், அவர் வசித்து வந்த காணியை அண்டிய காணியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த மரணத்தில் மரமம் நீடிப்பதாகவும், பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நேற்றைய தினம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
