நீரில் மூழ்கி சிறுமியொருவர் மரணம்: மற்றுமொரு சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமி பாசல்மாவத்த - ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஸானி ஹன்சலா (10வயது) எனவும் நீரில் மூழ்கிய சிறுமி கன்னியா வீதி - மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அயோத்யா (10வயது) எனவும் தெரியவருகின்றது.
இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை
எழுதிவிட்டு தமது வகுப்பாசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்குச் சென்ற நிலையில்
பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிய போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கிய சிறுமி அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
