வவுனியா ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் கோவிட் காரணமாக மரணம்
வவுனியா, குடியிருப்பு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களும், வவுனியாவின் மூத்த சிவாச்சாரியருமாகிய கணபதிசித்தர் சிவஸ்ரீ.க.கந்தசாமி (K.Kandasamy) குருக்கள் மரணமடைந்தார்.
சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
71 வயதான அவர் யோகாசன கலைஞராகவும், ஜோதிட வல்லுனராகவும் திகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது சடலம் சுகாதார நடைமுறைகளிற்கமைய பூந்தோட்டம் இந்து மயானத்தில் இன்று எரியூட்டப்பட்டது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |