நாய்க்குட்டிகள் மத்தியில் பரவும் கொடிய சுவாச நோய்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாய்க்குட்டிகள் மத்தியில் கொடிய சுவாச நோய் பரவி வருவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகர்திலக தெரிவித்துள்ளார்.
இந்த சுவாச நோய்க்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை இல்லை என்று சாகர திலகா கூறியுள்ளார்.
எனவே பாதுகாப்பான முறைகளை பின்பற்றி 8 மாதங்களுக்குள் செல்லப்பிராணிகளை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள்
இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஈறுகளின் நிறமாற்றம் (வெளிர்வு) பசியின்மை சோம்பல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது கலப்பினங்களிடையே வேகமாகப் பரவி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது இது மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாத்தளை பிரதேசங்களில் பரவலாக பரவியுள்ளதுடன் கம்பளை, நாவலப்பிட்டி, கினிகத்தேன மற்றும் ஹட்டன் பிரதேசங்களில் 80 வீதமான நாய்க்குட்டிகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri