வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் சடலம் மீட்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13.09) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
பொலிஸார் விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் இரவு பயணித்த புகையிரத்த்தில் மோதுண்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்டதனால், குறித்த நபர் மரணித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயது மதிக்கத்தக்க நபராவார். இதேவேளை, சடலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை...
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்! போதை மாத்திரைகளால் சுயநினைவின்றி இருந்த கைதிகள் - வெளியாகும் அதிர்ச்சி தகவல்
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri