தயாசிறிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இடமில்லை : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு (Dayasiri Jayasekara) இனி எந்த ஒரு கட்டத்திலும் சுதந்திரக் கட்சியில் இணைய இடமளிக்கப்படாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகரவை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணைத்து அவருக்கு முக்கியமான பதவியொன்றை வழங்க ஒருசிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கட்சியுடன் இணைவு
எனினும் கட்சியின் தற்போதைய தலைவரான நிமல் சிரிபால டி சில்வா மற்றும் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் அதனை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அதன் காரணமாகவே இனி வரும் காலங்களில் எந்த ஒரு கட்டத்திலும் தயாசிறி ஜயசேகரவை சுதந்திரக்கட்சிக்குள் உள்வாங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தயாசிறி ஜயசேகரவும் இனிவரும் காலங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தனது அரசியலை தொடர்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan