பொதுச் செயலாளராக தயாசிறி: சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு பலத்த பாதுகாப்பு

SLFP Maithripala Sirisena Dayasiri Jayasekara
By Dharu Jul 05, 2024 05:43 AM GMT
Report

புதிய இணைப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுச் செயலாளராக தயாசிறி: சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு பலத்த பாதுகாப்பு | Dayasiri As The General Secretary Of Slfp

முதலாம் இணைப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகரவின் கடமைகளை பொறுப்பேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்றாலும், அதில் பங்கேற்கும் தகுதி தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கெஹெலியவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

கெஹெலியவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் எனவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகாமையில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தலைமையகத்தில் ஒன்றுகூடுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொதுச் செயலாளராக தயாசிறி: சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு பலத்த பாதுகாப்பு | Dayasiri As The General Secretary Of Slfp

நீதிமன்ற தீர்ப்பு 

பொதுச் செயலாளராக தயாசிறி: சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு பலத்த பாதுகாப்பு | Dayasiri As The General Secretary Of Slfp

முன்னதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய தாம்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்றைய தினம் (05) தயாசிறி ஜயசேகர பொறுப்புக்களை  தயாசிறி ஜயசேகர ஏற்கவுள்ளார்.

கொழும்பு – டார்லி வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தமது பதவியேற்பு நிகழ்விற்கு எவரேனும் இடையூறு விளைவித்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பங்காளிகளைத் தக்கவைக்க மொட்டு கடும் பிரயத்தனம்

பங்காளிகளைத் தக்கவைக்க மொட்டு கடும் பிரயத்தனம்

அரசாங்கத்தின் அதிகாரம்

இதன்படி இன்று (05) டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று பணிகளை பொறுப்பேற்கவுள்ளதாக நேற்றையை சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு குழுவும் சீர்குலைக்க முயற்சித்தால், தாம் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் எனவும் குறிப்பிட்டார்.

எனவே நாசவேலைகளை செய்யாமல் சுதந்திரமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்க அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் யாருடைய சொத்தும் அல்ல என்றும், அந்த இடத்திற்கும் வரும் மக்களுக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் ரணில் : கஜேந்திரன் குற்றச்சாட்டு

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் ரணில் : கஜேந்திரன் குற்றச்சாட்டு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US