வாகன விற்பனையால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டம்! தயாசிறி குற்றச்சாட்டு
வட மத்திய மாகாண சபைக்கு (NCP) சொந்தமான வாகனங்களின் விற்பனையால் அரசுக்கு 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர, ஒரு BMW மற்றும் பல டொயோட்டா பிராடோ உட்பட 12 வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் அரசு 28 மில்லியன் ரூபாய்களை மட்டுமே சம்பாதித்ததாகக் கூறியுள்ளார்.
நட்டத்துக்கான காரணம்
வாகன சந்தையில், ஒரு BMW மட்டும் 35 மில்லியன் ரூபாய் மதிப்புடையது, அதே நேரத்தில் ஒரு பிராடோ சந்தையில் 20.5 மில்லியன் மதிப்புடையது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காப்பீட்டு மதிப்பீடுகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கு பதிலாக, தேய்மானம் அடைந்த புத்தக மதிப்புகளின் அடிப்படையில் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டமையே, நட்டத்துக்கு காரணம் என்று ஜெயசேகர கூறியுள்ளார்.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
