மீரிகம - குருநாகல் வரையான வீதி பொது போக்குவரத்திற்காக திறக்கப்படும் திகதி அறிவிப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதி இம்மாதம் 20ஆம் திகதி முதல் பொது போக்குவரத்திற்காக திறக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக கண்டி – கொழும்பு மற்றும் கொழும்பு – குருநாகல் வரை பயணிக்கு பேருந்துகளை மாத்திரம் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி நேற்று திறந்துவைக்கப்பட்ட நிலையில், தனியார் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி வரை அங்கு பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடப்படாது என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.