தசுன் சானக்கவை புகழ்ந்த கௌதம் கம்பீர்
இந்திய ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்துக்கு முன்னர், தற்போதைய இலங்கை-இந்திய 20க்கு 20 கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றிருந்தால், இலங்கையின் அணியின் தலைவர் தசுன் சானக்கவை, ஏலத்தில் எடுக்க, சில அணிகளின் உரிமையாளர்களிடம் பணம் இருந்திருக்காது என்று இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் கௌதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு நிறைய பணம் கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது 20க்கு 20 போட்டியில் தசுன் சானக்க 22 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்ததுடன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதனையடுத்தே கம்பீர், அவரை புகழும் வகையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.