வங்கிக்கணக்கில் உள்ள பணம்! உண்மை நிலவரத்தை பகிரங்கப்படுத்தும் தானிஷ் அலி (Video)
என்னுடைய வங்கிக்கணக்கில் 500 ரூபாய் பணமே இருக்கும் என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்தார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் இதன்போது தானிஷ் அலி கூறுகையில், என்னுடைய வங்கிக்கணக்கில் 500 ரூபாய் பணமே இருக்கும்.
வங்கிக்கடன் இரண்டு கோடி ரூபா உள்ளது. நானே மிகவும் வறுமையில் இருக்கின்றேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர். நான் கோடீஸ்வரன் இல்லை.
இது தான் உண்மையான நிலவரம் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நான் வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவன், மலையகத்தைச் சேர்ந்தவன் அல்லது கொழும்பைச் சேர்ந்தவன் என்ற பாகுபாடற்ற மக்கள் போராட்டமே காலிமுகத்திடல் போராட்டம்.
ஆனால் இந்த போராட்டம் முன்னோக்கி கொண்டு செல்லப்படும்.
74 வருடங்களாக எழுதப்பட்ட நடைமுறையை மாற்றும் போராட்டமே இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
