கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்
கொழும்பில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 50 லட்சம் பெறுமதியான அழகு கலை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பெறுமதியான அழகு கலை பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை நுகர்வோர் விவகார ஆணையத்தினால் நேற்று பிற்பகல் இந்த அழகு கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல் மாகாண புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய தகவலுக்கமைய கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள களஞ்சிய அறையிலேயே இந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது..
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களின் பைகளில் மறைத்து இந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் அதில் இருந்த திகதி அடையாளங்களும் மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அழகு கலை பொருட்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் பிரயோகிப்பதாக தகவல் வெளியாகியு்ளது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan