கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்
கொழும்பில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 50 லட்சம் பெறுமதியான அழகு கலை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பெறுமதியான அழகு கலை பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை நுகர்வோர் விவகார ஆணையத்தினால் நேற்று பிற்பகல் இந்த அழகு கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல் மாகாண புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய தகவலுக்கமைய கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள களஞ்சிய அறையிலேயே இந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது..
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களின் பைகளில் மறைத்து இந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் அதில் இருந்த திகதி அடையாளங்களும் மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அழகு கலை பொருட்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் பிரயோகிப்பதாக தகவல் வெளியாகியு்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 4 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan