பிரபல நடிகைக்கு முன்பிணை வழங்குவதனை எதிர்க்கும் பொலிஸார்
இலங்கையின் முன்னணி நடிகை தமீதா அபேரட்ன மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு முன்பிணை வழங்குவதனை பொலிஸார் எதிர்த்துள்ளனர்.
தமீதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் முன்பிணை கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மீதான விசாரணைகளின் போது பொலிஸார், முன்பிணை வழங்குவதற்கு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மோசடி
நபர் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 35 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தி தமீதா மற்றும் கணவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளின் அடிப்படையில் பிணை வழங்குவதனை எதிர்ப்பதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த முன்பிணை மனு தொடர்பில் எதிர்வரும் 27ம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
