மினி சூறாவளி காரணமாக 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதம்
நோர்வூட் பிரதேசசபைக்கு உட்பட்ட டிக்கோயா - பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ஆம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரைகள் காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளதால் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதேநேரம் குறித்த பகுதியில் பாரிய கருப்பன் தைலம் மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் விழுந்ததால் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.
இதேபகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடி குடியிருப்பில் ஒரு சிலவீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
குறித்த பகுதியில் சுமார் 50 இற்கு மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து விழுந்துள்ளதுடன், அதில் சில மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததில் மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்ததால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி இன்று காலை விஜயம் செய்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam