கட்டணம் செலுத்தாதோரின் நீர் விநியோகம் துண்டிப்பு
கட்டணம் செலுத்தாத 95,000 பேரின் நீர் விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த துண்டிப்பானது கடந்த அக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாதவர்களிடையே மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புக்கள்
இதன்படி அக்டோபர் 31ஆம் திகதியுடன் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 95,241 ஆகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் 12.97 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க வேண்டியுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |