இலங்கையில் உண்மையை கண்டறியும் குழு ஒன்று இந்த சந்தர்ப்பத்தில் அவசியம் இல்லை: அம்பிகா சற்குணநாதன்
இலங்கையில் உண்மையை கண்டறியும் குழு ஒன்று இந்த சந்தர்ப்பத்தில் அவசியம் இல்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச்சபையில் நேற்று (28.03.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பல ஆண்டுகளாக பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.

இலங்கையில் உண்மையை கண்டறியும் குழு
தற்போதைய நிலையில் அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதனைவிடுத்து, புதிதாக தென்னாபிரிக்காவின் மாதிரியை ஒத்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது, ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக உண்மையை கண்டறியும் குழு தொடர்பில் இலங்கையின் அமைச்சர்களாக அலி
சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு சென்று
வந்த நிலையிலேயே அம்பிகா சற்குணநாதனின் கருத்து வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri