மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் தற்போதைய அவலநிலை: பொதுமக்கள் விசனம்
மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மைய கட்டிடத்தொகுதி பாழடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அதிகாரிகளினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குறித்த சுற்றுலா மையம், நானாட்டான் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சுற்றுலா மையம் தற்போது அடர்ந்த காடு போல் காட்சியளிப்பதோடு, குறித்த மைய கட்டிடத்தொகுதி சேதமாக்கப்பட்டுள்ளதோடு, பொருட்களும் உடைக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டு சுமார் 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவ்வாறு சேதப்படுத்தப்பட்டு மக்கள் பாவனை இன்றி காணப்படுகின்றமை குறித்து உரிய அதிகாரிகள் கவனயீனமாக செயல்படுகின்றமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam