ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos)

Sri Lanka Upcountry People Mannar Curfew Sri Lankan Peoples
By Kanamirtha May 12, 2022 09:22 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணியளவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குப் பேருந்து நிலையங்களிலும் அதிகளவான மக்கள் ஒன்றுகூடிய நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மன்னார்

மன்னாரிலும் மக்கள் எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குப் பேருந்து நிலையங்களிலும் அதிகளவாக ஒன்றுகூடியிருந்தனர்.

அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகள் 12 மணி வரை இயங்கிய நிலையில் அதிகளவான மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

பொது இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் இன்று மதியம் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - ஆசிக் 

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

மலையகம்

நாட்டில் நடைமுறையிலிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிமுதல் தளர்த்தப்பட்டதை அடுத்து மலையகத்தில் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது.

சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், கடை தொகுதிகள் என்பன திறக்கப்பட்டு இருப்பதையும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் மும்முறமாக ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

சில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதையும், அரச திணைக்களங்கள் திறந்திருந்துள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறுவதையும் அவதானிக்கமுடிந்தது.

மேலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நகரங்களின் பிரதான சந்திகளில் வீதிமறியல் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி - திருமால்

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

யாழ்ப்பாணம்

யாழிலுள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கூட்டம் கூடமாக வருகைதந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

ஊரடங்கு சட்டத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நேற்றையதினம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், இவ்வாறு மக்கள் வந்து செல்வதை காணமுடிகிறது.

அந்தவகையில் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 800ற்கும் அதிகமானோர் வாகனங்களுடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது. இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதன்போது குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் வாகன நெரிசலை சீர் செய்யவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US