கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் எரிபொருள் மீது பொருளாதாரத் தடை விதிக்க முடிவு செய்யலாம் என்ற தகவலால் கச்சா எண்ணெய் விலை இன்று சுமார் 3 டொலர்கள் உயர்ந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் பரலுக்கு 3.44 டொலர் அதிகரித்து 111.37 டொலராக உள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையை விட 1.2% அதிகமாகும்.
இதற்கிடையில், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை இன்று 3.54 டொலர் அதிகரித்து 108.24 டொலராக உள்ளது.
இதற்கிடையில், வார இறுதியில் சவூதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் தளத்தின் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலால் உலக சந்தைகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.