ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை தொடர்பில் கடும் விமர்சனம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றுள்ள நிமாலி நியனாராச்சி என்ற வீராங்கனை தொடர்பிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறித்த வீராங்கனை தனது போட்டி இலக்கத்தை சட்டைப் பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளமையே இவ்வாறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
அதேபோல ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு பற்றியும் விமர்சனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.