வடமாகாண பிரதம செயலாளரின் பொருத்தமற்ற நியமனத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Uky(ஊகி) Oct 16, 2024 08:00 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளராகவும் தற்போதைய வடமாகாண பிரதம செயலாளராகவும் செயற்படும் இளங்கோவனால் வழங்கப்பட்ட அதிபர் நியமனம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நியமனம் பெற்ற பதில் அதிபரால் அவர் கடமையாற்றும் பாடசாலையில் அசௌகரியமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நேர்முக பரீட்சைக்கு தோற்றாத ஒருவருக்கு பதில் அதிபர் நியமனம் வழங்கி பாடசாலையின் பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

3.5 பில்லியன் ரூபா வற் வரி மோசடி! அர்ஜூன் அலோசியஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

3.5 பில்லியன் ரூபா வற் வரி மோசடி! அர்ஜூன் அலோசியஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

இது பல முறைகேடான நிகழ்வுகளுக்கு காரணமாய் அமைந்துள்ள போதும் உரிய தீர்வுகள் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

பதில் அதிபர் நியமனம்

கடந்த 2021 ஆம் ஆண்டு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் நியமனம் கோரி வடமாகாண கல்வி அமைச்சினால் பத்திரிகை விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண பிரதம செயலாளரின் பொருத்தமற்ற நியமனத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Caused Inappropriate Appointment Northern

நேர்முக பரீட்சைக்கு தோற்றிய ஒருவரையே பாடசாலைக்கு பொருத்தமானவர் என்ற அடிப்படையில் நியமனம் செய்யக்கூடிய சூழலில் நேர்முக பரீட்சைக்குத் தோற்றாத ஒருவரை முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இளங்கோவனால் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு பதில் அதிபராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இது அதிகார துஸ்பிரயோகம் என பாடசாலை நலன் விரும்பிகள் பலரால் தற்போது சுட்டிக்காட்டப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொருத்தமற்ற விளைவுகள் 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றும் நாகேந்திரராசா பல்வேறு மோசடி குற்றங்களில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் ஜனாதிபதி அலுவலகம், ஆளுநர் செயலகம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு என பல்வேறு தரப்பினருக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடமாகாண பிரதம செயலாளரின் பொருத்தமற்ற நியமனத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Caused Inappropriate Appointment Northern

முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து பிரதம செயலாளர் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சுயாதீன விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அவ்வாறே வடமாகாண கல்வி அமைச்சினால் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் தலைமையிலான சுயாதீன விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்விசாரணைக் குழுக்களினால் தீவிர விசாரணைகள் நடைபெற்று குற்றங்கள் மற்றும் மோசடிகள் இனங்காணப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்திய உள்ளக தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவ் அலுவலகத்தினால் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் தொடர்பான விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மத்திய கல்வி அமைச்சிற்கும் கட்டளைகள் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா - கனடா ராஜதந்திர போர்: மோடிக்கும் ட்ரூடோவுக்கும் கிடைக்கும் அரசியல் பலன்கள்

இந்தியா - கனடா ராஜதந்திர போர்: மோடிக்கும் ட்ரூடோவுக்கும் கிடைக்கும் அரசியல் பலன்கள்

வலயக்கல்வி அலுவலகம் 

முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தகுதியற்றவருக்கான அதிபர் நியமனத்தினால் அப்பாடசாலை பாரியளவிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான அசையும் அசையா சொத்துக்கள் அதிபரால் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் இனம் காணப்பட்டுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளரின் பொருத்தமற்ற நியமனத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Caused Inappropriate Appointment Northern

துணுக்காய் வலயக்கல்லிப் பணிப்பாளர் மாலதி முகுந்தனால் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

அதிபர் சி. நாகேந்திரராசாவின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மாணவர்களது கல்வி, ஒழுக்கம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது.

பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டில் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளதுடன் இப் பாடசாலை 1AB பாடசாலையாகவும் SLPS 2 தர அதிபர் கடமையாற்றுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இவ் அதிபர் மீது தன்னால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறுவுறுத்தல்களையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கணிணி ஆய்வு கூடம் 

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட வலயமட்ட கணனி ஆய்வுகூட மேற்பார்வை அறிக்கையில் கணினி ஆய்வுகூடம் சீரான பராமரிப்பில் இல்லை எனவும் பழுதடைந்த கணினிகள் பதிவளிக்கப்படாததுடன் கணினிகளில் உதிரிப்பாகங்களில் 15 RAM உட்பட பல பாகங்கள் இல்லை எனவும் கணினி ஆய்வுகூட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட இரு வீடுகள்

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட இரு வீடுகள்

மோசடியான அதிபர் 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றும் நாகேந்திரராசா மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வடமாகாண பிரதம செயலாளரின் பொருத்தமற்ற நியமனத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Caused Inappropriate Appointment Northern

இவர் கடமையாற்றிய முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மறைமுக அரசியல் செல்வாக்கினால் மறைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் அழுத்தம் 

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அசையும் அசையா சொத்துக்களில் மோசடியில் நாகேந்திரராசாவின் நண்பனாகிய முன்னாள் யாழ் மாவட்ட நா்ாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பயன்படுத்தி அரசியல் அழுத்தம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண பிரதம செயலாளரின் பொருத்தமற்ற நியமனத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Caused Inappropriate Appointment Northern

அதிபர் சி. நாகேந்திரராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அவரது சகோதரனாகிய தற்போதைய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் ஒட்டுசுட்டான் தபால் ஊழியர் ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக வட மாகாணக் கல்விப் பணிப்பாளரை (முன்னாள்) சந்தித்துள்ளனர்.

அச் சந்திப்பின் போது அதிபர் நாகேந்திரராசா மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் எனவும் மோசடி செய்யப்பட்ட அசையும் அசையா சொத்துக்களின் பெறுமதியினை மீள செலுத்துவதாகவும் உயர் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இளங்கோவன் தற்போது வடமாகாண பிரதம செயலாளராக உள்ளார்.

வடமாகாண கல்வியமைச்சில் செயலாளராக கடமையாற்றிய போது பதில் அதிபராக நியமனம் செய்யப்பட்டிருந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளுக்கு இவர் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வாரா என்ற கேள்வியும் ஏழமால் இல்லை.

ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ள பணம்

ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ள பணம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US