இலங்கையில் கோவிட் தொற்றால் 9 நாட்களில் 123 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த மே முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 17 ஆயிரத்து 558 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், 9 நாட்களுக்குள் கோவிட் தொற்றால் 123 பேர் உயிரிழந்துள்ளனர். மே முதலாம் திகதி ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினம் 9 கோவிட் மரணங்கள் பதிவாகின.
மே 2ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் ஆயிரத்து 843 பேருக்கு வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. கோவிட் தொற்றால் அன்றைய தினம் 9 பேர் பலியாகினர். அத்துடன், மே3 ஆம் திகதி ஆயிரத்து 913 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அன்றைய தினம் 13 பேர் உயிரிழந்தனர்.
மே 4ஆம் திகதி ஆயிரத்து 860 பேருக்குத் தொற்று உறுதியானது. அத்துடன் 11 மரணங்கள் பதிவாகின. மே 5ஆம் திகதி ஆயிரத்து 897 பேருக்கு தொற்று உறுதியானது. அன்றைய தினம் 14 மரணங்கள் பதிவாகின.
மே 6ஆம் திகதி ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அன்றைய தினம் 11 மரணங்கள் பதிவாகின. மே 7ஆம் திகதி ஆயிரத்து 889 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், 19 மரணங்கள் பதிவாகின.
மே 8ஆம் திகதி 22 மரணங்கள் பதிவாகின். ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்றியது.
நேற்று 10ஆம் திகதி 2 ஆயிரத்து 672 பேருக்கு வைரஸ் பரவியது. 15 மரணங்களும்
பதிவாகின.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam