இலங்கையில் இரண்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொவிட் தொற்று
இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றின் இந்திய மாறுபாடுடன் மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நபர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றினை தடுப்பதற்காக இலங்கையில் வழங்கப்பட்ட கொவிஷீட்ல்ட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றவர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் கொழும்பு வைத்தியசாலையின் ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் அவர்கள் அனைவரும் தற்போது குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.