கோவிட் ஆபத்து அதிகரித்துச் செல்வதாக எச்சரிக்கை
கோவிட் ஆபத்து நிலைமை அதிகரித்துச் செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் ஒழிப்பு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே இந்தவிடயத்தை தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். கோவிட் பரிசோதனைகளில் நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகளை எளிதில் எடுத்துக்கொள்ளக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 40 சிறார்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.வீஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
