மேலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகள்
இந்தியாவிலிருந்து சுமார் 5,000,000 குப்பி ஒக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் கட்டுநாயக்க விமான நிலைய மேலாளர் சரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் இறக்கப்பட்ட உடனேயே, அவை விமான நிலையத்தில் உள்ள இறக்குமதி சரக்கு சேமிப்பு வளாகத்தில் குளிர்பதன வசதியில் சேமிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தடுப்பூசிகள் விமான நிலையத்தில் உள்ள மத்திய கிடங்கிற்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த குளிர் கொள்கலன் பாரவூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக சரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri