கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படுகிறது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
வைத்தியசாலை நிர்வாகத்தின் அறிவிப்பு
தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்ற கோவிட்-19 தொற்று காரணமாக மேற்படி இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தடுப்பூசிகளை
பெற்றுக்கொள்ளாத பொது மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளை
பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம்
அறிவித்துள்ளது.