இலங்கையில் பரவும் பிரித்தானிய கோவிட் மாறுபாடு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பரவுகின்ற கோவிட் -19 வைரஸின் மாறுபாடு இங்கிலாந்தின் கென்ட் ( Kent) பகுதியில் காணப்படும் கோவிட் வைரஸின் புதிய மாறுபாடுக்கு ஒத்ததாக காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் பரவி வரும் கோவிட் - 19 வைரஸ் தீவிரமானது எனவும், நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்ட பின்னர் அறிகுறிகள் தென்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த புதிய வைரஸின் பண்புகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
முடிந்தவரை தங்கள் பயணங்களை மட்டுப்படுத்த வேண்டும். பெரிய கூட்டங்களை ஒன்றுகூட அனுமதிக்கக் கூடாது எனவும், அடுத்த சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதனூடாக வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam