வவுனியாவில் திடீர் சுகயீனத்திற்கு உள்ளாகிய ஐந்து பேர் உயிரிழப்பு
வவுனியாவில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் நால்வர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை மற்றுமொருவர் பம்பைமடுவில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.