வவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் முடிவுகள் இரவு நேற்று இரவு வெளியாகின.
அதில், காத்தார் சின்னக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று பேருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
