கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட 180 சிறுவர்கள் மருத்துவமனைகளில்
கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட 180 சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மொத்தமாக 25 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இரு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, 105 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதில் 18 பேர் சிறிமாவோ பண்டாரநாயக்க, சிறுவர் மருத்துவமனையில் 35 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில் உள்ளார். கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் ஏழு சிறுவர்கள் இறந்துள்ளதாக தெரியவருகிறது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 3 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்தார். மற்றொன்று ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30 சிறுவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஃபைசர் தடுப்பூசியை 20 - 30 அகவையினருக்கு, வழங்காமல் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது வழங்குவது சிறந்த தீர்வாக இருக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளது.
12 அகவைக்கு மேற்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தால், அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஃபைசர் மட்டுமே என்றும், சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
