மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தைச் சேர்ந்தோர் உள்ளிட் 46 பேருக்கு கோவிட் தொற்று
மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் 26 பேர் உள்ளடங்களாக மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலை 46 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று காலை விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலை மேலும் 46 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 26 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்களாக காணப்படுகின்றனர்.
ஏனையவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, முருங்கன் வைத்தியசாலை, அடம்பன் வைத்தியசாலை, பேசாலை வைத்தியசாலை, விடத்தல் தீவு வைத்தியசாலை, மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இம் மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 399 கோவிட் தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1423 தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 1440 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 13 கோவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
