உடன் அமுலாகும் வகையில் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களின் பல பகுதிகள்
இலங்கையில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், பதுளையின் வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹூலங்கபொல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டதொல கிராம சேவகர் பிரிவின் அபேதன்ன வத்தை பிரதான பகுதியும், க்ளே பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மன்னாரில் தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் - கரவெட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட கரனவாய் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரியின் பொத்தகந்த கிராம சேவகர் பிரிவின் நோரகல தோட்டம் மேல் பிரிவு, பனாவென்ன கிராம சேவகர் பிரிவின் பெல்மதுல தோட்டத்தின் 1ஆம் 5ஆம் பிரிவுகள் மற்றும் கபுஹெதொட்ட கிராம சேவகர் பிரிவின் பெல்மதுல தோட்டத்தின் 5ஆம் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 233ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
