மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 206 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட இருவர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேருக்குமென 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகூடியதாக 55 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
கடந்த மாதத்தில் 7959 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கடந்த வாரத்தில் 1414 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நாளாந்தம் 200இற்கு மேற்பட்ட தொற்றாளர்களும் 5 மேற்பட்ட உயிரிழப்பும் இடம்பெறுகின்றதுடன் தொடர்ந்து 2013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 1600 பேர் வீடுகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
