கோவிட் தொற்று விரைவில் முடிவுக்கு வரும்! நிபுணர் ஒருவரின் தகவல்!
சர்வதேச அளவில் கோவிட் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அறிவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வோஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் வைத்திய கலாநிதி குதுப் மஹ்மூத் (Dr Kutub Mahmoood) இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கோவிட் ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸாகும்.
எனவேதான் அது மிக அதிக மாறுதல்களை கொண்டுள்ளது. இந்தநிலையில் கோவிட் தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும்.
இந்த ஆண்டில் தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் வெளியாக முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே அதன் பரவலைக் கட்டுப்படுத்த, மூன்றாம் தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குதுப் மஹ்மூத் கூறியுள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri