இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட்: ஒரே நாளில் 4000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று!
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு கொரோனா கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,916 ஆக உள்ளதாகவும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுவரை 220,66,16,373 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நேற்றைய தினம் (04.04.2023) ஒரே நாளில் 1,979 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் கோவிட் பரவலைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. குறிப்பாகத் தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
