இலங்கை தூதுவராலயத்தின் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று
இந்தியாவின் புது தில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது ஆறு பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உஸ்தானிகராலயம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியா முழுவதும் தொற்றால் உயிரிழப்பவர்களின் தொகை பல மடங்காக அதிகரித்துள்ளது.