இலங்கையில் கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் குறித்து சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
கோவிட் தொற்று அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்கு, சிக்கன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கோவிட் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருகிறது.
பொதுமக்களுக்கான அறிவிப்பு
அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.
எனினும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கூறுகையில், கோவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் கோவிட் தொற்று
இந்தியாவில் தற்போது கோவிட் வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
