இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கோவிட் மரணங்கள் - சுகாதார பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்களாக இருப்பதால் தங்கள் வீடுகளில் உள்ள வயதானவர்களுக்கு வைரஸைக் கொண்டு செல்லும் போக்கு இருப்பதாகவும், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் வைரஸால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் அறிகுறிகளை காட்டாமல், ஆரோக்கியமான நபராக சமூகத்தில் உள்ளவர்களில் சிலரை தெரிவு கோவிட் பரிசோதனை செய்தி தொற்றாளர்களை அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி செலுதத்திக் கொண்டால் மரணத்தை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களுக்கு மோதுமான சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியசாலைகளில் கட்டில்கள் உள்ளதெனவும் நோயாளிகளுக்கு அவசியமான ஒக்ஸிஜன் மற்றும் வேறு சிகிச்சைகள் வழங்கும் முறையை முகாமைத்துவத்துடன் முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
