வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் கோவிட் தொற்று உறுதி
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும் நேற்று முன்தினம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக மக்களுக்கான தனது கடமைகளை அலுவலகத்தில் மூடிய கண்ணாடி அறையிலிருந்து ஆற்றிவந்த நிலையிலும் அவருக்கு கோவிட் தொற்றியுள்ளமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களைத் தேவையற்று சந்திக்காமல் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி ஏற்படுத்தியிருந்தது.
அவரது நெருங்கிய சகாவான ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவர் அடிக்கடி அவரது அலுவலகத்தில் சந்தித்து வந்துள்ள நிலையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதேச செயலர் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் பலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.