பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் கடமை புரியும் 6 பேருக்கு கோவிட் தொற்று
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் கடமை புரியும் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் பயிற்சி பெற்று வந்த பளை செல்வபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வங்கியில் விடுமுறை பெற்று வீட்டில் ஒய்வு எடுத்துள்ளார்.
பின்னர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் கடந்த 19/07/2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் கடமையில் இருந்தவர்கள் பலருக்கு உடல் நிலை சீரினமையால் அவர்களுக்கும் சுகாதார துறையினர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் மேலும் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam