பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் கடமை புரியும் 6 பேருக்கு கோவிட் தொற்று
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் கடமை புரியும் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் பயிற்சி பெற்று வந்த பளை செல்வபுரத்தை சேர்ந்த ஒருவர் தனது உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வங்கியில் விடுமுறை பெற்று வீட்டில் ஒய்வு எடுத்துள்ளார்.
பின்னர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் கடந்த 19/07/2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் கடமையில் இருந்தவர்கள் பலருக்கு உடல் நிலை சீரினமையால் அவர்களுக்கும் சுகாதார துறையினர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் மேலும் ஐவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
