ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட 12 பேரை தனிமைப்படுத்துமாறு உத்தரவு
மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம் ஸ்ரீ நாகம்மாள் ஆலய தலைவர் உள்ளிட்ட 12 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 12 பேரும் நேற்றைய தினம் மூதூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே அவர்களை தனிமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில் ஆலய தலைவர் உள்ளிட்ட 12 பேரையும் கைது செய்ததாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறி ஒன்று கூடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.