இலங்கையில் கோவிட் - 19 தொற்றால் உயிரிழந்துள்ள முதல் பொலிஸ் அதிகாரி
மொனராகலை பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியொருவர் கோவிட் - 19 தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
59 வயதான குறித்த நபருக்கு கடந்த 3ஆம் திகதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான குறித்த பொலிஸ் அதிகாரி ஓய்வு பெறும் நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது இறுதி சடங்குகள் சுகாதார சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் என தெரியவருகிறது.
மேலும், இலங்கை பொலிஸில் முதலாவது கோவிட் - 19 மரணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam