நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு
கோட்டை மற்றும் கொத்தட்டுவ பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொத்தட்டுவ பகுதியில் 74 பேரும், கோட்டையில் 60 பேரும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர கால கட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை மற்றும் கொட்டாவை தவிர, கொழும்பின் பிற பகுதிகளிலும் பம்பலப்பிட்டிய , நாரஹேன்பிட்டிய கொல்லுப்பிட்டிய, கொடஹேன மற்றும் கிராண்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.