அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! - நாட்டு மக்களிடம் கோரிக்கை
அரசியல் கூட்டங்களை நடத்துவதால் நாடு முழுவதும் கோவிட் தொற்று வைரஸ் வேகமாக பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,
தற்போது உலகில் கோவிட் தொற்றின் அதிக ஆபத்து உள்ளது என்றும், ஒமிக்ரோன் மாறுபாடு நாடு மற்றும் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும் கூறினார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக, வழமை போன்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தேவையற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற அரசியல் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக நாடு மீண்டும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, பொதுமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan