அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! - நாட்டு மக்களிடம் கோரிக்கை
அரசியல் கூட்டங்களை நடத்துவதால் நாடு முழுவதும் கோவிட் தொற்று வைரஸ் வேகமாக பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,
தற்போது உலகில் கோவிட் தொற்றின் அதிக ஆபத்து உள்ளது என்றும், ஒமிக்ரோன் மாறுபாடு நாடு மற்றும் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும் கூறினார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக, வழமை போன்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தேவையற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற அரசியல் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக நாடு மீண்டும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, பொதுமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 8 மணி நேரம் முன்
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்