மேலாடையின்றி உலவிய வெளிநாட்டு பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை
மேலாடையின்றி உலவிய வெளிநாட்டு பெண் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் மேலாடையின்றி உலவித் திரிந்த தாய்லாந்து பெண்ணுக்கு நீதிமன்றம் ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பொத்துவில் நீதிமன்றினால் குறித்த பெண்ணுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒத்தி வைப்பு
குறித்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
26 வயதான குறித்த தாய்லாந்து யுவதி நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதான வீதியில் அநாகரீகமாக நடந்து கொண்டமை, பொதுமக்களுக்கு இடையு_று ஏற்படும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக நீதிமன்றம் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதலனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண் இவ்வாறு நடந்து கொண்டதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
