யாழில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) மருதங்கேணி பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது, இன்று (31.05.2024) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட மருதங்கேணி பொலிஸ் பிரிவில் கஞ்சா உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றையதினம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து, குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |